திங்கள், 27 டிசம்பர், 2010

பாகம் உதைபந்தாட்ட விதிகள்

9. பந்து விளையாட்டில் இருப்பதும் இல்லாமல் விடுவதும்

மத்தியஸ்த்தரால் எந்த ஒரு காரணத்தினாலும் விளையாட்டு இடை நிறுத்தப்படும் வரை பந்து விளையாட்டில் இருக்கின்றது.

பந்து கோல்க் கம்பத்திலோ மூலைக் கம்பத்திலோ பட்டு மைதானத்திற்குள் திரும்பி வரும் போதும்
மத்தியஸ்த்தரில் (பக்கக் கோடுகளில் நிற்கும் போது) அல்லது உதவி மத்தியஸ்த்தர்களில் பட்டுத் திரும்பி வரும் போதும் தொடர்ந்து விளையாடப்பட வேண்டும்.

மத்தியஸ்த்தரால் ஏதாவது காரணத்திற்காக விளையாட்டு இடை நிறுத்தப் பட்டால்
மைதானத்தின் வெளி எல்லைக் கோடுகளை பந்தின் முழு உருவமும் தாண்டினால்
பந்து விளையாட்டில் இல்லை என்று கருத வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக